மாசிலா உண்மைக் காதலே..
படம் : அலிபாபாவும் 40 திருடர்களும் (1956)
நான் பிறந்த ஆண்டில் வெளிவந்த படம்..
என்னைப் போல் என்றும் இளமையாக..
பாடியவர் : ஏ.எம்.இராஜா - பி.பானுமதி
இயற்றியவர் : கவிஞர் அ.மருதகாசி
இசை : எஸ்.தெட்சிணாமூர்த்தி
நடிப்பு : மக்கள் திலகம் - பி.பானுமதி
மாசிலா உண்மைக் காதலே..
மாறுமோ? செல்வம் வந்தப் போதிலே..
மாசிலா உண்மைக் காதலே..
மாறுமோ? செல்வம் வந்தப் போதிலே..
பேசும் வார்த்தை உண்மைதானா?
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா?
பேசும் வார்த்தை உண்மைதானா?
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா?
கண்ணிலே மின்னும் காதலே..
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே?
நெஞ்சிலே நீங்கிடாத பொங்கும் இன்பமே..
நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே?
நெஞ்சிலே நீங்கிடாத பொங்கும் இன்பமே..
நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே?
பேசும் வார்த்தை உண்மை தானா?
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா?
மாசிலா உண்மைக் காதலே..
மாறுமோ? செல்வம் வந்தப் போதிலே..
கண்ணிலே மின்னும் காதலே..
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே?
உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே..
இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே..
உந்தன் ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே..
இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே. .
அன்பினாலே ஒன்று சேர்ந்தோம் இங்கு நாம்
இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்..
அன்பினாலே ஒன்று சேர்ந்தோம் இங்கு நாம்
இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்..
மாசிலா உண்மைக் காதலே..
மாறுமோ? செல்வம் வந்தப் போதிலே..
மாசிலா உண்மைக் காதலே..
மாறுமோ? செல்வம் வந்தப் போதிலே..
மாறுமோ?
No comments:
Post a Comment